இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவை சவூதி விமானம் இன்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தனது அரசாங்கத்தின் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதற்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இந்தியாவிடம் தஞ்சம் புக கோரிக்கை விடுத்த நிலையில், இந்திய அரசு ஏற்க முடியாது என கைவிரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது இறுதி இலக்கு நிச்சயமற்ற நிலையில் தற்போது மாலத்தீவில் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்ததால் அங்கிருந்து கிளம்பி சவூதி விமானத்தில் சிங்கப்பூர் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையிலாய் ராஜபக்ச குடுமப்த்திற்கும் சீனாவுக்குமான நெருக்கம் மிக அதிகம் என்பதால், அவர் சிங்கப்பூரிலிருந்து ரகசியமாக சீனாவில் தஞ்சம் புகலாம் என பரவலாக பேசப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…