ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஏவுகணைகள் தலைநகர் கீவின் தென்மேற்கே அமைந்துள்ள நகரின் அலுவலக கட்டிடத்தை தாக்கியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ராணுவ பகுதிகள் அல்லாத பொதுமக்கள் குடியிருப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாகவும் இது பயங்கரவாதத்தின் வெளிப்படையான செயல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு நாளும் ரஷ்யா குடிமக்களை அழித்து வருகிறது, உக்ரேனிய குழந்தைகளைக் கொன்றது, பொதுமக்கள் பொருட்களை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது என காட்டமாக கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…