தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் மகள் ராஜலட்சுமி (வயது 21) கடந்த இரண்டு வருடங்களாக நீட் எழுதி தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து, அதே ஊரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் நீட் தேர்வு எழுதினார்.
தேர்வு முடிவுகள் வருகின்ற 7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தாய், தந்தையின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாமல் மீண்டும் தேர்வில் தோல்வியடைந்துவிடுவமோ என்று சோகமாக இருந்துள்ளார் ராஜலட்சுமி.
இதற்கிடையில், நேற்று தேர்வுக்கான விடைத்தாள் ஆன்லைனில் வெளியானதை ராஜலட்சுமி சரி பார்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வீடுதிரும்பிய அவருடைய தந்தை தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால், அவசர அவசரமாக மாணவியின் உடலை உறவினர்களும் தந்தையும் சேர்த்து சுடுகாட்டிற்கு தகனம் செய்ய முயன்றபோது, இத்தகவல் அறிந்து அந்த கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் மாணவி நீட் தேர்வில் தோல்வி பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும், போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…