Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உயிரிழந்த காதலி.. சடலத்திற்கு தாலி கட்டிய காதலன்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

Sekar November 20, 2022 & 14:46 [IST]
உயிரிழந்த காதலி.. சடலத்திற்கு தாலி கட்டிய காதலன்.. நெகிழ்ச்சி சம்பவம்!!Representative Image.

காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அசாமின் ரஹாவைச் சேர்ந்த ஒரு ஆண், தனது நீண்டகால காதலி உயிரிழந்த நிலையில், அவரது சடலத்திற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை காலமான தனது நீண்ட நாள் காதலியை அந்த இளைஞன் திருமணம் செய்துகொண்டார். மேலும் இறந்தவரின் முன் வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியளித்தார்.

பிடுபன் தாமுலி என அடையாளம் காணப்பட்ட வீடியோவில் உள்ள இளைஞன், தங்கள் வழக்கப்படி தரையில் சடலமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்த சபர்முக் என்ற பெண்ணிற்கு திருமண சடங்குகளை செய்து திருமணம் செய்து கொண்டார். மோரிகானில் வசிக்கும் பிடுபன் மற்றும் கொசுவா கிராமத்தில் வசிக்கும் பிராத்தனா போரா ஆகியோர் நீண்டகால காதலர்கள் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். 

இந்த உறவும், இருவரின் திருமணத் திட்டமும் இரு வீட்டாருக்கும் தெரியும். "சில நாட்களுக்கு முன்பு பிராத்தனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எங்களால் எவ்வளவோ முயற்சி செய்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வெள்ளிக்கிழமை இரவு அவர் இறந்துவிட்டார்" என்று அவரது சகோதரர்களில் ஒருவரான சுபோன் போரா கூறினார். 

இதனால் மனம் உடைந்த பிடுபன் திருமணப் பொருட்களை இறுதிச் சடங்கிற்கு எடுத்துச் சென்றான். "பிடுபன் வந்ததும், அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறினான். இது எங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதால் நாங்கள் பேசாமல் இருந்தோம். யாரோ ஒருவர் என் சகோதரியை இவ்வளவு ஆழமாக நேசிக்க முடியும் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை. அவரைத் தடுக்க முயற்சிப்பதை எங்களால் யோசிக்கக்கூட முடியவில்லை." என சுபோன் கூறினார்.

"பிடுபன் அழுதுகொண்டே எல்லா சடங்குகளிலும் ஈடுபட்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். என் சகோதரி உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அவர் பிடுபனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். பையன் அவளுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்றினான். வேறு என்ன சொல்ல வேண்டும்?" சுபோன் கேட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்