Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... 2 ஆசிரியர்கள் கைது...

Muthu Kumar July 30, 2022 & 12:40 [IST]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... 2 ஆசிரியர்கள் கைது...Representative Image.

தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கோவை அருகே பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு மாணவி தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்நிலையில், மாணவி அளித்த புகார்களின் அடிப்படையில் 43 வயதான ஆசிரியர் பாலசந்திரன், 46 வயதான ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களிடமும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்