சென்னை திருவெற்றியூரில் உள்ள டியூசன் செண்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியிடம் தவறான உறவு வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரைச் சேர்ந்த சேகர் அப்பகுதியில் 30 வருடங்களாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூஷன் சென்டரில் படிக்க வந்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கும் சேகரிக்கும் பழக்கம் ஏற்பட்டு தவறான தொடர்பில் இருந்துள்ளனர்.
இதனை சேகரின் மலைவி வனஜா தட்டிக்கேட்டுள்ளார், அதற்கு இது குறித்து பேசினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார், இதனையடுத்து வனஜா அளித்த புகாரின் பேரில் சேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…