Tamilnadu News Live : தமிழகத்தில் ஜூன் 4 ஆம் வாரத்தில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி விடுமுறை
தமிழக பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி
மே 31-ம் தேதியுடன் அணைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முழுமையாக முடிந்து விடுகின்றன. இதனிடையே நடந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ள நிலையில் தேர்வு முடிந்தவுடன் ஜூன் 1 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பள்ளி திறப்பு
தமிழகத்தில் ஜூன் மாதம் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 4 ஆம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம்
பள்ளி திறப்பு தள்ளிபோனதன் காரணம், காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் உள்ளதால் ஜூன் 4 வது பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…