தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் பணியாற்றும் 3000 ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் தொடர் கோரிக்கையால் பள்ளிக்கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், விருப்ப இடமாறுதல், பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங், மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது. அதன்படி, 3,000 ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் நிறுத்தப்பட்டது. அரசாணை இல்லாமல், புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று நிதித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த நியமன ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்வதோடு, ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாணை வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…