தெற்கு டெல்லியில் உள்ள படர்பூரில் வசிக்கும் நித்தேஷ யாதவின் மகள் ஆயுஷி சவுத்ரி. தாய் தந்தை சகோதரனோடு டெல்லியில் வசித்து வந்த ஆயுஷி டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வந்தார். ஆயுஷி தனது குடும்பத்தினரிடம் கூறாமல் வேறு சாதியைச் சேர்ந்த சத்ரபால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு, வீட்டிற்கு தெரியாமல் வெளியே வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே அடையாளம் தெரியாத ஒரு சிவப்பு சூட் கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில், பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த சூட்கேஸை திருந்து பார்த்தனர். அப்போது அதில் 22 மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
பின்னர், பெண்ணை அடையாளம் காண டெல்லியில் போஸ்டர்களை ஒட்டினார்கள். மேலும், தொலைபேசிகளை கண்காணித்தனர், சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தனர் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அடையாளம் காண முயற்சி செய்தனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 20,000 செல்போன்கள் எண்கள் மற்றும் 210 சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸாருக்கு அப்பெண்ணின் உறவினர்களிடமிருந்து கால் வந்துள்ளது. அவரது தாயும் சகோதரரும் புகைப்படங்கள் மூலம் அப்பெண்ணை அடையாளம் கண்டுள்ளனர்.
அடையாளம் காட்ட வந்த தந்தையின் செயல்பாடுகளில் இருந்த சந்தேகத்தின் பேரில் அவரை தனியே விசாரணை செய்துள்ளனர். அப்போது தான் வேற்று சாதியினரை திருமணம் செய்து தனக்கு தெரியாமல் வெளியே வாழ்ந்து வந்த தன் மகளின் மீது உள்ள ஆத்திரத்தில் சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
டெல்லியை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும்... காதலியை கொன்று 6 துண்டுகளாக வெட்டிய காதலன்...
அதாவது, ஆயுஷி சவுத்ரி வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துக்கொண்டது, பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அதை பலமுறை கண்டித்தும் அவர் கேட்காமல், கடந்த 17 ஆம் தேதி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், அடுத்த நாள் ஆயுஷி யாதவ் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார், அப்போது தான் உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஆயுஷியை சுட்டுக் கொன்ற பிறகு, நித்தேஷ் யாதவ் அவரது உடலை டிராலி சூட்கேஷில் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு முட்புதரில் வீசியுள்ளார். இதற்கு ஆயுஷியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளர்.
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் இளம்பெண் ஒருவர் 35 துண்டுகளாக ெவட்டப்பட்டு காதலனால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் டெல்லியை சேர்ந்த மற்றொரு பெண் தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…