ஒருவர் தான் மழை நீரில் நனையாமல் இருக்க மாணவர்களை சேர்களைப் போடச்சொல்லி அதில் நடந்து வந்துள்ளது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் நேற்று தொடர் மழை பெய்தது. இதனால், அப்பகுதியில் உள்ள பள்ளிக்குள் மழை நீர் புகுந்தது. இந்த நிலையில், பள்ளிக்கு ஆசிரியை வந்தார். ஆனால், பள்ளி வளாகத்தில் நீர் நிரம்பியிருந்ததால், அவர் உள்ளே வர முடியவில்லை. மாணவர்களை சேர்களைப் போடச் சொல்கிறார்.
இதன்படி மாணவர்கள் நீரில் இறங்கி ஒவ்வொரு சேராக போட அதில் ஏறி ஆசிரியை பள்ளிக்குள் வருகிறார். அவர் ஏறும் சேர் சாய்ந்து விடாமல் இருக்க மாணவர்கள் பிடித்துக் கொள்கின்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானாது. இதையடுத்து அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…