தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 1.10.22 அன்று 12½ வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் செப்டம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பிக்க தவறியவர்கள் செப்டம்பர் 12 மற்றும் 13-ந் தேதியில் தட்கல் விண்ணப்ப கட்டணத் தொகை 500 ரூபாய் கூடுதலாக பணம் செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.
இதனையடுத்து, முதல்முறையாக தேர்வு எழுத விண்ணப்பிக்க கூடியவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்று சான்றிதழ், நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…