Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை.. சுரங்கப்பாதையில் மூழ்கிய பள்ளி பேருந்து.. 

Nandhinipriya Ganeshan August 26, 2022 & 11:05 [IST]
கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை.. சுரங்கப்பாதையில் மூழ்கிய பள்ளி பேருந்து.. Representative Image.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும், மாலை நேரத்தில் திடீரென பலத்த மழை வெளுத்து வாங்கிய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் இளையரசனேந்தல் ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியது. 

அந்த சமயத்தில் அந்தப் பகுதி வழியாக கோவில்பட்டி தனியார் மேல்நிலைப்பள்ளி வாகனம் வந்துள்ளது. அப்போது தேங்கிய மழை நீரை கடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த பள்ளி வாகனமும் அதனை கடக்க முற்பட்டது. 

அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் வசமாக பள்ளி வாகனம் சிக்கிக்கொண்டது. அதனை கண்டு அச்சம் அடைந்த பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகள் கதறி பரிதவித்து போய் விட்டனர்.

அந்த குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த மக்கள் விரைந்து சென்று குழந்தைகளை காப்பாற்றினர். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு பலத்த மழையின் போதும் இவ்வாறு சுரங்க பாலத்தின் பாதையில் வாகனங்கள் சிக்கிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்