Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு..

Nandhinipriya Ganeshan September 09, 2022 & 10:50 [IST]
இன்று முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு..Representative Image.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11-ஆம் தேதி) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் (வெள்ளிக்கிழமை) 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். 

வருகின்ற 15 ஆம் தேதி வரையும், அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து சரக்கு வாகனங்கள், வாடகை வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்