Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடனமாடிக் கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்த இளம் வயது நடனக் கலைஞர்....!

Gowthami Subramani September 08, 2022 & 17:30 [IST]
நடனமாடிக் கொண்டிருக்கும் போதே மரணம் அடைந்த இளம் வயது நடனக் கலைஞர்....!Representative Image.

ஜம்மு காஷ்மீரில் 20 வயது இளம் வயது நடன கலைஞர் ஒருவர் மேடையில் நடனமாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவில், ஒரு ஆண் கலைஞர் ஒருவர், மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த போதே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவரது பெயர் யோகேஷ் குப்தா என்றும், நடனமாடும் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

20 year old Jammu girl dies of heart attack while performing on stage. Could CPR have saved her ? Did lack of public awareness lead to her death? pic.twitter.com/w7lMoHGC4a

— Sudhir Chaudhary (@sudhirchaudhary) September 8, 2022

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஜம்முவில் உள்ள பிஷ்னா பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகேஷ் குப்தா, பார்வதி தேவியின் வேடமிட்டு நடனமாடியுள்ளார். நடனம் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த கலைஞர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அந்த சமயத்தில், யோகேஷ் குப்தா உடன் நடனம் புரிந்த, சிவபெருமான் வேடமிட்ட மற்றொரு நபர் அவரை எழுப்ப முயற்சி செய்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் எழவில்லை. இதனைக் கண்ட பார்வையாளர்களும் இது நிகழ்ச்சியின் ஒரு பகுதி என நினைத்து அமைதியாக இருந்துள்ளனர். பிறகு நீண்ட நேரமாகியும் எழாததால், நிலைமையைப் புரிந்து கொண்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Stage Artist Yogesh Gupta, 20, Collapses Dead On Stage While Performing...

"Heart attack"...

Collapsed while giving a dance performance during the Ganesh Utsav programme in Kothey village of Jammu...

- republicworld pic.twitter.com/zeDiWHtZBP

— Dr. James E. Olsson (@DrJamesOlsson) September 7, 2022

சமீப காலமாக இது போன்ற துயர் சம்பவம் நடைபெற்றுக் கொண்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் கே கே என அழைக்கப்படும் பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் என்பவர் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சிக்குப் பின் உயிரிழந்துள்ளார். அதே போல, மே மாதம் 28 ஆம் நாள் அன்று, கேரளாவின் ஆலப்புழாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையிலேயே விழுந்து மூத்த மலையாள பாடகரான எடவா பஷீரும் இறந்தார். இவ்வாறு மாரடைப்பால் தொடர்ந்து நடைபெறும் சம்பவத்தால், எல்லோரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்