பாஜக ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் இருக்குமா? என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் அதிமுக பஞ்சத்திற்கு திருடும் கட்சி, திமுக பரம்பரை திருட்டு கட்சி என கடுமையாக சாடியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலேறு பெருஞ்சித்தனார் நினைவுதினம் நெல்லை ரஹ்மத் நகரில் வைத்து அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்துகொண்டு பெருஞ்சித்தனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், பின்னர் நினைவு ஜோதியை ஏற்றிவைத்து நாம் தமிழர் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, தமிழ் தேசிய அரசியலை விதைத்தவர் பாவலரேறு. அவரது நினைவுகளை கூறுவதில் பெருமை அடைகிறோம் என கூறினார். பின்னர் நாட்டில் இறையாண்மையை கெடுக்கும் செயல்களை பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றவை செய்து வருகின்றனர். இந்து கோட்பாட்டாளர்களுக்கும், சிவனுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. மதமோதல்களை தூண்டி தூண்டி நாட்டை பிரிவனை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. பயங்கரவாதிகளும் கொடுமை செய்பவர்களுமாக இருக்கின்றனர் என கூறினார்.
மேலும் இலங்கைக்கு 7000 கோடி கடன் கொடுப்பதில் என்ன பயன்? அதனால் சிங்களர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்திய அரசின் 8 ஆண்டு காலமும் மாநில அரசின் 1 ஆண்டுகாலமும் சாதனை அல்ல சோதனை என அவர் கூறினார்.
ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழலை கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து கேட்கவில்லை? ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் பாஜக இருக்குமா? அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை திருடர்கள் என சீமான் கடும் விமர்சனம் செய்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…