தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டை கிராமத்தில் ஆசிர்வாத சகோதர சபை என்ற பெயரில் தேவாலயம் உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் ஜோஸ்வா என்பவர் போதகராக இருந்து வருகின்றார். இவர் அங்குள்ள பெண்ணுக்குத் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணம் முடிந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவு அளித்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறி வரும் நிலையில் தனது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் எனக்கு பிறந்த குழந்தை தானா எனக் கேட்டு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகிய இருவரும் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா மற்றும் போலீசார் விரைந்து சென்று வினோத் ஜோஸ்வாவை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு வைத்து கைது செய்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையில், போதகர் கர்ப்பிணி பெண்ணுக்கு 14 வயதிலிருந்தே பாலியல் தொல்லை அளித்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…