ஜப்பானின் நார பகுதியில் பிரச்சாரத்தில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று திறந்த வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்குவந்த மர்ம நபர் ஒருவர் கூட்டத்தின் பின்னல் இருந்து சுட்டதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர்க்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து உலக தலைவர்கள் அனைவரும் இத துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய பிரதமர் மோடி எனது நண்பர் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அவரின் இழப்பு ஜப்பான் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…