சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கர்நாடகாவின் மிக முக்கிய மடங்களில் ஒன்றான முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரை செப்டம்பர் 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் முன்ஜாமீன் கோரிய மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமீன் மனு மீது இன்று தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
முன்னதாக வியாழக்கிழமை இரண்டு மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சரணருவை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சித்ரதுர்கா எஸ்பி பரசுராமன், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ததாக தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் உள்ள செல்வாக்கு மிக்க முருக மடத்தின் பீடாதிபதி மீது இரண்டு மைனர் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் விவகாரம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…