Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி.. அரக்கோணம் அருகே சோகம்..

Nandhinipriya Ganeshan September 05, 2022 & 11:15 [IST]
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி.. அரக்கோணம் அருகே சோகம்..Representative Image.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்த சேர்ந்த 45 வயதான ஜியா உல்ஹக், சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி இவரது உறவினருக்கு திருமணம் நடந்துள்ளது. புதுமண தம்பதிக்கு விருந்து வைப்பதற்காக வீட்டிற்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதுமண தம்பதியோடு சில உறவினர்களும் தக்கோலத்திற்கு நேற்று வந்துள்ளனர். 

மதியம் விருந்து முடிந்தது மாலையில் அதே பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கொண்டம் என்ற பகுதிக்கு 16 பேர் குளிப்பதற்காக சென்றுள்ளனர். மகிழ்ச்சியோடு குளித்துக் கொண்ட அந்த குடும்பம், அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ஆறு பேர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்து அவர்களுடன் குளித்து கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து, அருகில் இருப்பவர்கள் வந்து அவர்களை மீட்க முயற்சித்தனர். 

அதில் மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவி மற்றும் மேலும் இரண்டு பெண்கள் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அவர்களை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் அறிந்து மருத்துவமணைக்கு வந்த தக்கோலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பலியான மூன்று பெண்களில் ஒருவர் தலைமை காவலர் ஜியா உல்ஹக்கின் 13 வயது மகள் பவுசியா என்பதும், மேலும் இருவர்கள் அவரது அண்ணன் மகள்கள் ரசூல் (வயது 24), பரிதாபானு (வயது 21) என்பதும் தெரியவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்