கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த மனைவியை ஜிபிஎஸ், கேமரா கொண்டு கண்காணித்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த சதன்யாவுக்கும், சஞ்சய்க்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதனையடுத்து வடபழனியில் உள்ள ஆஸ்டா ஏவிஎம் வளாகத்தில் உள்ள ஒரு ஆடம்பரமான பங்களாவில் இருவரும் வசித்து வந்தனர். சஞ்சய் சோழிங்கநல்லூரில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்ப்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து சதன்யா 2020 இல் தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று 2021 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், சமீபத்தில், சதன்யா தனது காரில் ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். மேலும் அவரது வீட்டின் எதிரே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததையும் கண்டுள்ளார். தன்னை உளவு பார்ப்பதற்காக அந்த மின்னனு சாதனங்களை தனது கணவர் வைத்துள்ளார் என்பதை அறிந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவான சஞ்சய்யை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…