இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுளது.
ஸ்கை பஸ் என்பது மெட்ரோவை போலவே இருக்கும் ஒரு பேருந்து போக்குவரத்து அமைப்பாகும். இந்த ஸ்கை பஸ் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். மேலும் இந்த பறக்கும் பேருந்துகளில் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் பயன்படுத்தலாம்.
இந்நிலையில், இந்தியாவில் டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் ஸ்கை பஸ்களை இயக்க பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும், போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான மாற்று வழியாக இந்த திட்டம் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…