பசு கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மொண்டலை சிபிஐ இன்று அவரது இல்லத்தில் இருந்து கைது செய்தது.
இன்று அதிகாலை அனுப்ரதா மொண்டலின் வீட்டிற்கு வந்த சிபிஐ குழுவால் கிட்டத்தட்ட ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு மொண்டல் கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்காக மொண்டல் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஒரு நாள் முன்னதாக, தான் நோய்வாய்ப்பட்டுள்ளதால் பசுக் கடத்தல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை அதிகாரிகளுக்கு முன் ஆஜராக இயலாது எனக் கூறி கடிதம் எழுதியிருந்தார். 60 வயதான அனுப்ரதா மொண்டல், இது தொடர்பாக தனது கடிதத்துடன் இரண்டு மருந்துச் சீட்டுகளின் நகல்களையும் இணைத்து அனுப்பியிருந்தார்.
மேலும் சிபிஐ அதிகாரிகளிடம் அதன் பிர்பும் நகர அலுவலகத்தில் ஆஜராக இரண்டு வார கால அவகாசம் கோரினார். மொண்டல் சமர்ப்பித்த மருந்துச் சீட்டுகள் நகரின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை மற்றும் போல்பூர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களின் மருந்து சீட்டுகளாகும்.
இந்நிலையில், சிபிஐ கடந்த செவ்வாயன்று ஆஜராகுமாறு மொண்டலுக்கு அதன் பிர்பும் நகர அலுவலகத்திற்கு வருமாறு சம்மன் அனுப்பியது. மொண்டல் திங்களன்று நகரத்திற்குச் சென்றிருந்தார், ஆனால் சிபிஐ அலுவலகத்திற்குச் செல்வதற்குப் பதிலாக எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்குச் சோதனைக்காகச் சென்றார்.
அவருக்கு சில நாள்பட்ட நோய்கள் மட்டுமே இருப்பதாகக் கூறி இரண்டு மாதங்களுக்குப் பிறகு திரும்பி வருமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர்.
அதன் பிறகு, அனுப்ரதா மொண்டல் நேராக தனது போல்பூர் இல்லத்திற்கு புறப்பட்டார். பலமுறை ஆஜராக அறிவுறுத்தியும் வராததால், அதிரடியாக அவரது வீட்டிற்கே சென்ற சிபிஐ அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…