இந்தியாவில் விரைவில் ஸ்கைபஸ் எனப்படும் பறக்கும் பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்கைபஸ் எனபது மெட்ரோ ரயில் சேவை போன்ற ஒரு அமைப்பாகும், இதன் மூலம் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர்வரை வேகமாக பயணிக்க முடியும், இதனால் நேரம் விரையமாவது தடுக்கப்படும். மேலும் எரிபொருளுக்கு மாற்றாக மின்சார சக்தியை இதற்கு பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தி அல்ல. மாசுபாட்டைக் குறைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஸ்கைபஸ்களை தொடங்க விரும்புகிறோம் " என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி மற்றும் ஹரியானா போன்றவற்றின் சில முக்கிய பகுதிகளில் இந்த சேவை விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் எரிபொருட்களின் இறக்குமதியை முற்றிலுமாக குறைப்பதே தனது கனவு என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…