இந்தியாவில் ஆண்டுதோறும் டாப் பணக்கார பெண்களின் பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில், ஹூருன் நிறுவனம் மற்றும் கோட்டக் வங்கி இணைந்து 2021-ம் ஆண்டிற்கான பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டதி. அதில், இந்தியாவில் 100 பணக்கார பெண்களின் பெயர்களுடன் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், (2021) கடந்த ஆண்டில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஹெச்.சி.எல். டெல்னாலஜிஸ் நிறுவன தலைவர் ரோஹினி நாடார் சொத்துகள் 54 % அதிகரித்து 84,330 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஹெச்.சி.எல். டெல்னாலஜிஸ் நிறுவன தலைவர் ரோஹினி நாடார் முதலிடத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் நைக்கா அழகு சாதன் பொருட்கள் நிறுவனத்தின் தலைவர் பல்குனி நாயன் என்பவர் உள்ளார். மேலும், 3-ம் இடத்தில் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மசூம்தார் ஷா என்பவர் இடம் பிடித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…