Cuddalore Latest News : கடலூரில் வீட்டுக்குள் புகுந்த பாம்பைப் பார்த்ததும் சாமியாடி ஏன் என் வீட்டுகுள் வந்தாய்..? என கேள்வி எழுப்பிய பெண்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் அடிக்கடி பாம்புகள் புகுந்து விடுகிறது. இதனை வனத்துறையும் மீட்டு வனப்பகுதியில் கொண்டுசென்று பாதுகாப்பாக விடுகின்றனர். இந்நிலையில் உணவு பற்றாக்குறை மற்றும் கடுமையான வெயில் காரணமாக பல பாம்புகள் குடியிருப்புகளுக்குள் வந்து விடுக்கிறது.
வீட்டில் புகுந்த பாம்பு
கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் ஒரு வீட்டிற்குள் திடீரென பாம்பு வந்தது. இந்நிலையில் அந்த பாம்பை பிடிக்க வனத்துறையினர் வந்துள்ளனர். அப்போது அந்த பாம்பை பார்த்து அந்த வீட்டில் இருந்த பெண்ணொருவர், ’’ஏன் என் வீட்டுக்குள் வந்தாய்? நீ வரக்கூடாது என நாங்கள் சத்தியம் வாங்கி இருக்கிறோம். அதை மீறி ஏன் வந்தாய்?’’ என சாமியாடி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
வனத்துறையினர்
இதனையடுத்து வனத்துறையினர் படமெடுத்து ஆடிய பாம்பை அமைதியாக பிடித்துச்சென்று வனப்பகுதியில் விட்டனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…