Rain Update : தென்மேற்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜூலை 6ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழையால் இந்தியா முழுவதும் பரவலான மழை பொழிவு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜூலை 8ஆம் தேதி முதல் பரவலான மழை பொழிவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழையின் மழை கிடைக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்னும் இரண்டு வாரத்திற்கு பிறகு தென்மேற்கு பருவமழையால் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…