ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் நோய் பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்தியாவிலும் தற்போது குரங்கு அம்மை நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், பல்வேறு நாடுகளில் தொற்று பரவி வருவதை அடுத்து சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, விந்தணுக்களில் குரங்கம்மை டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது. பாலியல் உறவில் பரவுகின்ற அளவு இதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பது குறித்து ஆரய்ந்து வருவதாக ஆரச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்றுக்களின் அறிகுறிகளை போலவே குரங்கம்மைக்கும் அறிகுறிகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, வாய் அல்லது ஆசனவாய் பகுதியில் புண்கள் வருவது குரங்கம்மையின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…