இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து பல போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதனையடுத்து இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து தொடர்ந்த போராட்டங்களால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதனால் அங்கு போராட்டங்கள் வெடித்தது, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை மோசமடைந்ததைக் கண்டு, இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த அசாதாரண சூழலில் ஒரு விசித்திரமான நிகழ்வும் அங்கு நடந்தது. இலங்கையில் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஜோடி முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை நியூஸ்வயர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் அந்த புகைப்படத்திற்கான தலைப்பில் Couple goals என கேப்சன் வைத்துள்ளது. கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை கையகப்படுத்துவதற்கு வழிவகுத்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு இந்த ஜோடியின் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…