இலங்கை அரசு ஊடகமான Rupavahini நிறுவனத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் அதிபர் அலுவலத்திற்கு சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடியதால் அதிபர் கோத்தபய நாட்டைவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில், இலங்கையில் மீண்டும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக இலங்கை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து, இலங்கை அரசு ஊடகமான Rupavahini நிறுவனத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றி, அரசுக்கு எதிரான தங்களது கருத்துக்களை ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து Rupavahini என்ற இலங்கை அரசின் செய்தி தொலைக்காட்சியின் சேவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து இலங்கை அரசின் மற்றொரு ஊடகமான ITN நிறுவனத்தின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…