இன்று பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பினார்.
இலங்கையிஒல் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை ஆட்சி செய்து வந்த ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான கொள்கைகளே காரணம் என மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. இதனையடுத்து கடந்த 9ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியதை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி சென்றார்.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே, அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் இலங்கை விமானப்படை விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாக விமானப்படை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே மாலத்தீவின் தலைநகரான மாலேயில் இருக்கும் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கிருந்து வேறொரு ஆசிய நாட்டிற்குச் தப்பி செல்வார்கள் என இலங்கை அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…