இந்தியாவின் தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜுலை 4 ஆண்டு முடிவடைகிறது. இதனையடுத்து புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி காட்சிகள் சார்பில் ஜார்கண்ட் முன்னாள் ஆளுநரும் பழங்குடியின பெண்ணுமான திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். மேலும் குடியரசு தலைவர் தேர்வு முடிவுகள் ஜூலை 21 தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹா தமிழக முதல்வர் ஸ்டாலினை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். அந்த சமயத்தில் தேர்தலில் திமுகவின் ஆதரவு கோருகிறார். பின் இருவரும் இணைந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.
யஷ்வந்த் சின்ஹாவின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர் தங்கியிருக்கும் ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் உயர் அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…