தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 12 மணி நேரத்தில் சூறாவளி காற்றூ வீசும் என்று கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும், சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யவிருப்பதாகவும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…