Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தந்தையின் மதுப்பழக்கம்.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கடையில் உயிரை மாய்த்துக்கொண்ட அவலம்!!

Sekar September 24, 2022 & 10:56 [IST]
தந்தையின் மதுப்பழக்கம்.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கடையில் உயிரை மாய்த்துக்கொண்ட அவலம்!!Representative Image.

விழுப்புரம் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து வெளியாகியுள்ள தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவியின் தாய் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதையடுத்து தந்தை மற்றும் தம்பியுடன் குடிசை வீட்டில் மாணவி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். வெளியே சென்றுவிட்டு திரும்பிய மாணவியின் தந்தை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த மரக்காணம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்த நிலையில், மாணவியின் வீட்டில் அவர்களுக்கு சொந்தமில்லாத ஒரு செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்து விசாரித்ததில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் சிக்கினர். 

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் 2 பேரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் உரிய முறையில் விசாரித்துள்ளனர். அப்போது அந்த வாலிபர்கள் மாணவியுடன் உல்லாசமாக இருந்த திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

மாணவியின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த நிலையில், அவரது வீட்டுக்கு வருவதோடு, அவருக்கு மதுவையும் வாங்கிக் கொடுத்து வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக ஒவ்வொரு முறையும் இப்படி வீட்டிற்கு வந்து தந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து மயங்கச் செய்து விட்டு, மகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

மேலும் மாணவிக்கு அவர்கள் செல்போன் வாங்கி கொடுத்து, அதன் மூலம் அடிக்கடி கட்டாயப்படுத்தி பேசி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் அதேபோல் வாலிபர்கள் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

தொடர்ந்து நடந்து வரும் பாலியல் அத்துமீறல் ஒருபுறம் இருக்க, வாலிபர்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதால் அக்கம்பக்கத்தினரும் தவறாக பேச ஆரம்பித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தந்தையின் மதுப்பழக்கம் மாணவியின் உயிரை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்