கேரள மாநிலத்தில் சுற்றுலா தலம் ஒன்றில் மாணவர்கள் சாப்பிட்ட சிற்றுண்டி உணவில் புழுக்கள் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கோழிக்கோடு தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 25 பேர் மற்றும் 8 ஆசிரியர்கள் வாகமண் பகுதிக்கு சுற்றுலாவிற்காகச் சென்றுள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாணவர்கள் முட்டை குழம்பு சாப்பிட்டுள்ளனர். இதில் புழுக்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், அதனை உண்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…