கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூட்டடி கள்ளக்குறிச்சி மற்றும் ஆரியநத்தம் என்ற கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் கணிசமான மாணவ மாணவிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் காலை நேரங்களில் மாணவ, மாணவிகளுக்கு பேருந்துகள் போதுமான அளவில் இல்லாததால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பலமுறை கோரிக்கை வைத்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ மாணவிகள் பேருந்துகளின் படிகளில் தொங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு கிளம்பிய நிலையில் பேருந்து வராமல் கூட்டடி கள்ளக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…