Karnataka Latest News : கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. இதனால் குடகு மாவட்டத்திலும் சில பகுதிகளில் மக்கள் அதிர்வுகளை உணர்ந்துள்ளனர். இதனால் அப்பகுதியில், உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மக்கள் பலரும் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொருட்சேதம் சிறிய அளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…