அசாமில் ஏற்ப்பட்ட வெள்ளத்தில் சிக்கி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. வெள்ளம் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக ஏராளமானவர்கள் தாழ்வான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜூன் 22 புதன்கிழமை நேற்றைய தினம் வெள்ளத்தில் சிக்கி மேலும் 12பேர் பலியாகியுள்ளதாகவும், இதன் மூலம் பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில பேரிடர் மேலன்மை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின் படி, பார்பெட்டா மாவட்டம் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து தற்போது 862 நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக நிலைமை மோசமாக இருப்பதால், பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகள் புதிய பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், 32 மாவட்டங்களில் 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…