Sri Lanka : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த வரிகளை உயர்த்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக அன்னிய செலவாணி கையிறுப்பு குறைந்த நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதித்து. இலங்கை மக்கள் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடி
இந்நிலையில், இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வெடித்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார். இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கெ இலங்கை பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
வரி உயர்வு
இதனையடுத்து, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த தற்போது வரிகளை உயர்த்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இலங்கையில் தொலைதொடர்பு, ஆன்லைன் விளையாட்டுகள், பந்தய ஆட்டங்களுக்கான வரிகள் மற்றும் மதிப்பு கூட்டு வரிகள் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…