இலங்கையில் இடைகால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவரை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் மீண்டும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி, மின் தட்டுப்பாடு, உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனால் ரணில் விக்ரமசிங்க இடைகால பிரதராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் மக்கள் அதிபர் கோத்தாபயவும் பதவி விலக வேண்டும் என கூறி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாடினர்.
இதனால் கோத்தாபய இலங்கையிலிருந்து தப்பிய நிலையில் ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக உள்ளார். இந்நிலையில், அதிபர் பதவிக்கான தேர்தல் 20ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் இலங்கை மக்கள் இந்த அதிபர் ஆட்சி முறையும் சரியில்லை என போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஜனநாயக ஆட்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட்டத்தை தொடங்கியுள்ளதால், தற்போது மீண்டும் இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட்டுள்ளது. மேலும், வரும் 20ம் தேதி நடைபெறும் தேர்தலையும் மக்கள் பலர் புறக்கணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…