சென்னையில் கூகுள் CEO சுந்தர் பிச்சையின் சொந்த வீட்டை தமிழ் சினிமா நடிகர் சி.மணிகண்டன் வாங்கியுள்ளார்.
தமிழ்நாடு மதுரையில் வசித்த ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் சுந்தர் பிச்சை. இவர் பிறந்தது மதுரையாக இருந்தாலும், படித்தது எல்லாமே சென்னையில் தான். சென்னை ஜவஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி ஸ்கூல் மற்றும் வன வாணி பள்ளியில் பயின்றார். ஐஐடி காரக்பூரில் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். பின்னர் தொழில்நுட்பத்தின் மீது உள்ள ஆர்வத்தால் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று விட்டார் சுந்தர் பிச்சை. அங்கு பட்டப்படிப்பை முடித்து விட்டது, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றினார்.
தனது திறமையாலும், கடின உழைப்பாலும் கூகுள் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். இது இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். தற்போது சுந்தர் பிச்சை அவர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் 31.17 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பர வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை 40 மில்லியன் டாலருக்கு சுந்தர் பிச்சை வாங்கியுள்ளார். அவரின் பெற்றோர்கள் ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி சில நாட்கள் அங்கு வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, ரகுநாத பிச்சை சென்னையில் இருக்கும் தங்களின் சொந்த வீட்டை விற்க முடிவு செய்த தகவல் மணிகண்டனுக்கு தெரிய வர அதனை வாங்க முடிவு செய்துள்ளார். சுந்தர் பிச்சை அவர்கள் வளர்ந்த வீட்டை வாங்குவது எனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக மணிகண்டன் அவர்கள் தெரிவித்தார். வீட்டை அதிகாரபூர்வமாக வாங்கும் வரையில் ரகுநாத பிச்சை அவர்கள் மிகவும் கனிவுடன், நேர்மையாக நடந்துக் கொண்டார். தன்னுடைய மகன் சுந்தர் பிச்சை என்ற பெருமிதம் எதுவும் இன்றி இயல்பாக நடந்துகொண்டார். இறுதியாக பத்திரப்பதிவு முடிந்த பிறகு பத்திரத்தை ஒப்படைக்கும் போது ரகுநாத பிச்சை கண் கலங்கி வருந்தியதாக மணிகண்டன் அவர்கள் கூறினார்.
சுந்தர் பிச்சை வாழ்ந்த வீட்டை வாங்கிய மணிகண்டன் அடுத்த ஒன்றரை ஆண்டில் வில்லா கட்டி விற்பனை செய்யப் போவதாக தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…