பிரபஞ்ச அழகியாக படம் ஏற்று 28 ஆண்டுகள் ஆனதையடுத்து சுஸ்மிதா சென் அதுகுறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த சுஸ்மிதா செல் கடந்த 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரபஞ்ச அழகி படம் வென்றார். பிரபஞ்ச அழகியாக படம் பெற்ற முதல் பெண் இவர்தான். இந்த பட்டத்தை பெற்றதும் விழா மேடையிலே ஆனந்த கண்ணீர் வடித்து மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
இந்த படம் பெட்ரா பின்னர் பல மொழிகளில் நாயகியாக நடித்துவிட்டார். தமிழில் நாகார்ஜுன் நடிப்பில் வெளியான ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பிரபஞ்ச அழகியாக அவர் பட்டம் பெற்ற பின்னர் அடுத்ததாக நமக்கு இரண்டு கிரீடங்கள் கிடைத்தன. 2000ம் ஆண்டில் லாரா தத்தா மற்றும் 2021ம் ஆண்டில் ஹர்னாஸ் சந்து ஆகியோர் பிரபஞ்ச அழகியாக தேர்வானார்கள்.
இந்நிலையில் சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி பட்டம் வென்று 28 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை கொண்டாடும் வகையில் தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளார். அதில், அழகு என்பது ஓர் உணர்வு. இந்தியா முதன்முறையாக பிரபஞ்ச அழகி பட்டம் வென்று 28 ஆண்டுகள் ஆகி விட்டது. மகிழ்ச்சி, காலம் உருண்டோடுகிறது. அழகு குலையாமல் இருக்கிறது என பதிவிட்டு உள்ளார். அவரது பதிவுக்கு பலரும் அவரை பாராட்டியும், புகழ்ந்தும் விமர்சனங்களை பதிவிட்டு உள்ளனர். அவர்களுக்கு சுஷ்மிதா சென் நன்றியும், பதிலும் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…