Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரண்டாவது மனைவியை கொன்ற மூன்றாவது கணவர் கைது...ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்.!

madhankumar May 20, 2022 & 10:58 [IST]
இரண்டாவது மனைவியை கொன்ற மூன்றாவது கணவர் கைது...ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்.!Representative Image.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் பெண் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது மூன்றாவது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை அடுத்த கிருஷ்ணன் கோவில், ராஜீவ் காலனி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி லட்சுமணன் தம்பதி இவர்கள் இருவரும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் வீடுவாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி காளீஸ்வரி தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் உடலில் ரத்தகாயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கிருஷ்ணன் கோவில் பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் காளீஸ்வரி கொலையான நாளில் இருந்து அவரது கணவரையும் காணாததால் அவர்தான் கொலை செய்திருக்க கூடும் என்ற சந்தேகத்தில் அவரையும் போலீசார் தேடிவந்தனர். 

இந்நிலையில் அவரது செல்போன் சிக்னல் ஆதாரத்தின் அடிப்படையில் சிவகாசி ஜமீன்சல்வார் பட்டி அருகே பதுங்கியிருந்த காளீஸ்வரியின் கணவர் லட்சுமணனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில்:

கொலை செய்யப்பட்டுள்ள காளீஸ்வரியின் மூன்றாவது கணவர் தான் இந்த லட்சுமணன் என்பதும் மேலும் இந்த லட்சுமணனுக்கு காளீஸ்வரி இரண்டாவது மனைவி என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இரண்டாவது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் காளீஸ்வரி அடிக்கடி வேறு ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதை லட்சுமணன் கண்டித்தும் அவர் கண்டுக்கொள்ளவில்லை என கூறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த நாள் அன்று காளீஸ்வரி இரவு முழுவதும் ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது லட்சுமணன் போனை வைக்குமாறு கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த லட்சுமணன் ,காளீஸ்வரியை வீட்டில் இருந்த கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து விசாரணைக்கு பிறகு லட்சுமணனை கைது செய்த போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்