தூத்துக்குடி சோழீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொள்ளப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோழீஸ்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார். வழக்கறிஞராக உள்ள இவர் அதேப்பகுதியில் தங்க நகை அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று மதியம் வழக்கம்போல் கடையில் இருந்தபோது அங்கு வந்த சில மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்ததாகவும், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோதே திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுங்களால் முத்துக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திவிட்டு அந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையிரை அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.
அதோடு, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலைச் சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தற்போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் சகோதரர் சிவக்குமார் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்கனவே 10பேர் கொண்ட மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே குடும்பத்தில் இருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதோடு, மாவட்ட ஆட்சியர் அருகேயே தற்போது இந்த கொடூர கொலை நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…