Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் தீவிரமாக பரவும் பன்றிக்காய்ச்சல்..! 300 பன்றிகளை கொல்ல உத்தரவு...!

Muthu Kumar July 23, 2022 & 10:10 [IST]
இந்தியாவில் தீவிரமாக பரவும் பன்றிக்காய்ச்சல்..! 300 பன்றிகளை கொல்ல உத்தரவு...!Representative Image.

ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது பன்றி காய்ச்சல் பாதிப்பு தொடங்கியுள்ளது. அதன்படி, கேரளாவில் செயல்பட்டு வரும் இரு பன்றி பண்ணைகளில் இந்த பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பல பன்றிகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், உயிரிழந்த பன்றிகளின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய விலங்குகள் நோய் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரியை வைத்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த 2 பண்ணை பன்றிகளுக்கு ஆப்ரிக்கா பன்றி காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து, பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக பண்ணைகளில் உள்ள 300 பன்றிகளை கொலை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் அரசு விழிப்புணர்வுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்தியாவில் பீகார், உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் ஆப்ரிக்கா பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்த தொற்று விலங்களின் உயிரை விரைவாக கொல்லும் தன்மை கொண்டது.

மேலும், அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக 40,482 பன்றிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பண்ணைகளில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்