Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குவியல் குவியலாக சிக்கிய பணம்:- மிரண்டு போன அதிகாரிகள்...!

Bala July 23, 2022 & 08:33 [IST]
குவியல் குவியலாக சிக்கிய பணம்:- மிரண்டு போன அதிகாரிகள்...!Representative Image.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக வழக்கில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில உயர்நீதிமறம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் அம்மாநில கல்வித்துறை அமைச்சர்  பரேஷ்  மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆகியோருக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அந்த சோதனையில் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 20 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சி, தங்கம் ஆகியவையும் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ள நிலையில்,  அமலாக்கத் துறையும் தற்போது இவ்வழக்குத் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்