கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கடவந்திரா பகுதியைச் சேர்ந்த பத்மம் (52), காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் (50) ஆகிய இருவரும் கடந்த 26ஆம் தேதி காணாமல் போயினர். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விசாரணையில் திருவல்லா பகுதியில் இருவரின் மொபைல் போன் டவரும் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த பகுதியில் நடத்திய விசாரணையில் இன்று பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவல்லாவைச் சேர்ந்த பகவந்த் சிங் என்ற மந்திரவாதி, அதிக பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த இரண்டு பெண்களையும் கடத்தி, நரபலி கொடுத்தது தெரியவந்துள்ளது. பகவந்த் சிங், தனது மனைவி லைலா, முகமது ஷபி ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு இதை செய்துள்ளதாகவும், முகமது ஷபி சமூக வலைதளங்கள் மூலம் இரண்டு பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களை கடத்த உதவியுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்து பூஜை செய்த பின்னர், உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி திருவல்லா அருகே புதைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கில், பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, முகமது ஷபி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த இரண்டு பெண்களில் ஒருவர்(ரோஸ்லின்) தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து, பணம், செல்வச்செழிப்பு போன்ற காரணங்களுக்காக இதுவரை கேரளாவில் நரபலி சம்பவம் நடந்தது இல்லை, டெல்லியில் இதுபோன்று நடந்துள்ளது. படித்தவர்கள் அதிகம் வாழும், அறிவார்ந்த சமூகத்தினர் இருக்கும் கேரளாவில் நடப்பது இதுதான் முதல்முறை.
பணத்துக்காக இரண்டு பெண்களை கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…