சிறுவாணி குடிநீர் திட்ட பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கவும், குடிநீர் சேமிப்பை பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கவும், கேரளா அரசிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதனை மீண்டும் நினைவுபடுத்த வகையில் கேரளா அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேலும் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…