மதமும் சனாதனமும் வேறு வேறு என்று தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்தின் படி தர்மா என்றால் அறம் என்றுதான் பொருள் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழா இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி, அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை மனிதனின் கையில் மிக பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது மேலும் நாட்டை அளிக்க கூடிய வகைக்கு=யி சக்திகள் நமது கையில் உள்ளன என கூறியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டுவிட்டு வெளியிரிய போது இந்தியாவில் உள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை தர்ம விதிகளில் இருந்து திசை திருப்பப்பட்டது. அதிலிருந்து மீள வேண்டும் என்றால் வெள்ளையர்கள் ஆட்சி செய்த அளவிலான காலம் தேவைப்படும் என காந்தி தெரிவித்தார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்ட மத சார்பின்மைக்கும், வெளியே போதிக்கப்பட்ட மதசார்பின்மைக்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. சனாதன தர்மம் குறித்து பேசும்போது அதனை மதத்தோடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர். உண்மையில் சனாதனமும் மதமும் வேறு வேறு. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றி உள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது நாடு விழித்து கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…