Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இது தான் சனாதனம்.. புது வரையறை கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!!

Sekar June 29, 2022 & 13:33 [IST]
இது தான் சனாதனம்.. புது வரையறை கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!!Representative Image.

சனாதனம் குறித்து தொடர்ச்சியாக பேசிவரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சனாதனம் குறித்து புதிய வரையறையைக் கொடுத்துள்ளார். மேலும் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சொன்னதை மோடி நிறைவேற்றி வருகிறார் என்றும் கூறினார்.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஆகியவை ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழாவை இன்று தொடங்கியுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க நாளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். 

விழாவில் பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நதிகளை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நதிகளை தெய்வங்களாக நாம் வணங்க வேண்டும். 2016இல் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சார தயாரிப்பு திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 

முதலில் பல நாடுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் தற்போது சுமார் நூறு நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள். மரபு சாரா எரிசக்தி உற்பத்தியில் 2025க்குள் 100 ஜிகா வாட்ஸ் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அந்த இலக்கை 2021 செப்டம்பர் மாதத்திலேயே அடைந்து விட்டோம். 

2030க்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. சனாதனத்தின் மூலமே பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் நதிகளையும் காப்பாற்ற முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அனைத்து மக்களும் நதியை வழிபடுகிறார்கள். கால நிலை மாற்றம் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இது தான் சனாதனம். பூமியை ஒரு ஆதாரமாக பார்க்க கூடாது, அதை வணங்க வேண்டும்.

அடுத்த 30-40 ஆண்டுகளுக்குள் பல சிறிய தீவுகள் மற்றும் தீவு நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழல் மாறுபாட்டால், கார்பன் வெளியேற்றத்தால் பல பிரச்னை ஏற்படுகிறது. என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நான் நீரை வழிபட்டுள்ளேன். பண்டைய காலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம். 

நமது பண்டைய இணக்கமான சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் வரும் 2023 ஆகஸ்ட்க்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டுகள். 2047ல் நாம் உலக நாடுகளுக்கு தலைமை நாடாக விஸ்வகுருவாக திகழ வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்