Tamilnadu News Live : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புழல் பகுதிக்கு சென்று எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை திரும்பும் வழியில் வடகரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் திடீரென ஆய்வு நடத்தினார்.
அப்போது, அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை பார்வையிட்டார். மேலும், பள்ளிக்கூடத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று பார்வையிட்டார். மேலும், 10-ம் வகுப்புக்குள் சென்று மாணவர்களுடன் மேசையில் அமர்ந்தார். அங்கு ஆசிரியை பாடம் நடத்துவதை சிறிது நேரம் கவனித்தார்.
பின்னர் இதுகுறித்து மாணவர்களிடம் பேசினார் அப்போது, “படிக்காமல் சாதித்ததாக யாராவது ஒருவரை உதாரணம் காட்டினால் படித்து சாதித்தவர்களை லட்சம் பேரை நாம் காட்ட முடியும் என்றும் படிக்காமல் சாதிக்க முடியும் என்று யாராவது சொன்னால் அது வெறும் ஆசை வார்த்தை மற்றும் சூழ்ச்சி” என கூறினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…